நீ எந்தன் சாமி

Spread the love

நீ எந்தன் சாமி

நான் வணங்கும் ஆலயத்தில்
நீ எந்தன் சாமியடி
துயர் கறையை துடைக்கின்ற
தூரிகை நீயடி

கறை படியா ஓவியமே
கலங்காத காவியமே
நீயே எந்தன் மூச்சு
நிழல் காட்டும் பேச்சு

எதை மறந்து போனாலும்
உனை மறந்து போவேனோ ..?
விதி மிதித்து போனாலும்
மதியிழந்து தாழ்வேனோ …?

முகம் இழந்து போனாலும்
அகம் மறந்து வாழ்வேனோ ..?
நிலம் இழந்து போனாலும்
வானில் உன்னை பாரேனோ …?

சீனா பெரும் சுவராய்
சிறை பட்டு போனானே
நாளை உனை பார்க்க
நான் ஏங்கி நின்றேனே

பார்க்க மறந்து போனால் – இந்த
பார் அழிந்து போகும்
நினைவிழந்து போனால் – இந்த
நிகழ் காலம் சாகும் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -08-10-2020

வன்னி மைந்தன் கவிதைகள்

Home » நீ எந்தன் சாமி

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *