நாமல் ராஜபக்ஷ ராஜினாமா

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா
Spread the love

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா ,ஸ்ரீலங்கா பெருமனவின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் கட்சிகளில் பல மாற்றங்களும் போட்டிகளும் இடம் பெற்று வருகின்றன.

அவ்வாறான மிக முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என அறிவித்துள்ளது சரசரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு இன்னும் 50 நாட்கள் காணப்படுகின்ற இந்த வேளையில், இவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்திருக்கின்றார்.

சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இவர் சர்வதேச ரீதியில் என்னதான் செய்தார் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்து வாழும் சர்வதேச மக்கள் மத்தியிலும் அதனுடைய மக்களுடைய என்ன கருத்துக்களும் இவர் சரியாக உள்வாங்கு இருந்தால் ,இன்று இவர்களது கட்சி உரிய முறையில் வழிநடத்தப்பட்டு தங்களது இலக்கு நோக்கி பயணத்திற்கு முடியும்.

தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு அங்கு அடக்குமுறை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்படி விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தலை எதிர் நோக்கியும் அதனை வென்றுவிட பல கட்சிகள் பல்வேறுப்பட்ட சூழ்ச்சிகளை செய்து வருகின்ற நிலையிலும் அதில் ஒரு சூழ்ச்சியின் தன்மையாகவே நாமல் ராஜபக்சவின் பதவி விலகல் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.