தேர்தல் வருகிறது: மஸ்தான் எம்.பி இப்படி சொல்கிறார்

Spread the love

தேர்தல் வருகிறது: மஸ்தான் எம்.பி இப்படி சொல்கிறார்

ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு கிராமத்திலும் சிறுபான்மை மக்களிடம் அதாவது அரசியலை மார்க்கமாக, சமயமாக பார்க்க வேண்டிய நிலைமைக்கு எங்களுடைய தலைவர்களும், அரசியல்வாதிகளும் திணித்தார்கள். மார்க்கம் வேறு அரசியல் வேறு. நன்றாக நாங்கள் இதை எதிர்காலங்களில் தெரிந்து கொண்டு நடக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பல இடங்களில் பல திட்டங்கள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்துகின்ற போதும் காலப்போக்கில் கிராம மக்கள் பயனடைவதில்லை. ஒழுங்காக பயனடையாததனால் இந்த திட்டங்களை சில இடங்களில் மறுபடியும் செயல்படுத்தும் போது அதிகாரிகள் அதற்கு சில காரணங்கள் சொல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். எமது நாட்டினுடைய தேவைப்பாடுகள், அபிவிருத்திகள், நாட்டின் பொருளாதார தன்மையை ஸ்தீரணப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக நான் பிரதி அமைச்சராக இருந்ததாலும், கடந்த அரசுக்கு எங்களுடைய ஆதரவை வழங்க முடியாத ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு அதிலிருந்து நாங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களை ஐம்பத்து நான்கு நாட்கள் திட்டத்தில் பிரதமராக்கி அவர்களுடன் இருந்து பொருளாதாரம் வீழ்ச்சி நோக்கி செல்லும் போது அதனை நாங்கள் கட்டி எழுப்பும் முயற்சிகளை அன்றைய ஜனாதிபதி அவர்கள் எடுத்தார்கள்.

இந்த நாட்டினுடைய சட்ட திட்டத்திற்கு அது உடன்படவில்லை. தொடர்ச்சியாக பயணிக்க முடியாவிட்டாலும் நாங்கள் கடந்த காலத்திலிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்க முடியாது என்று நாங்கள் வெளிநடப்பு செய்ததில் நானும் ஒருவன். அந்த அடிப்படையில் உங்களுக்கு தெரியும் சென்ற அரசில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதே போல பிரதி அமைச்சர் எதிர்க்கட்சியில் இருந்தோம். இப்போது மீண்டும் அரசியல் சுழற்சியில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக நாங்கள் மாறியிருக்கிறோம்.

அதிகாரத்தை தருவதும் இறைவன். அதிகாரத்தை எடுப்பதும் இறைவன். அதனை நாங்கள் நம்புவதாக தான் இருக்கின்றோம். அந்த அடிப்படையில் இன்று அதிகாரம் இந்த வன்னி மாவட்டத்தில் எனக்கு தரப்பட்டிருந்தாலும் என்னுடைய செயல்பாடுகளை நான் மிகவும் நிதானமாக ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு விதமான கொடுத்து சோதனைக்கும் உட்படுத்தும் காலமாக இருக்கும்.

உங்களுக்கு தெரியும் பலருக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அதிகாரங்களை அவர்கள் எவ்வாறு பாவித்தார்களோ, இல்லையோ, ஆனால் மக்களுக்குரிய தேவைப்பாடுகளை அந்தந்த அதிகாரத்தில் இருந்தவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் நாங்கள் எடுத்து பார்க்கும் போது உங்களுக்கு தெரியும் பல அமைச்சர்கள் செய்திருக்கிறார்கள். அதேபோல முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் உட்பட பல வேலைத்திட்டங்களை செய்துதான் இந்த பகுதி கிராமங்கள் இவ்வளவு முன்னேறி இருக்கின்றது. அதில் எந்தவிதமான மாற்று கருத்துக்களும் இல்லை.

ஆனாலும் அன்று செய்த அவர்களுடைய ஆதரவாளர்களோ அல்லது நேரடியாக பணிக்கப்பட்ட சில செயற்பாடுகளும், திணிக்கப்பட்ட சில திட்டங்களும் இன்று இந்த நிலையை ஏற்படுத்தி இருப்பது என்பது உங்களுக்கு தெரியும்.

எனவே நாங்களும் தொடர்ச்சியாக கூறுகின்றோம். எமது இந்த அதிகாரங்கள் யாருக்கு இறைவன் கொடுத்தாலும் நாங்கள் அந்த மக்களை சார்ந்தவர்களாக இருந்து அந்த மக்களிடமிருந்து கேட்டு அந்த கிராமத்திற்கு என்ன தேவையோ அதை செய்யக்கூடியவையாக தான் எனது செயற்பாடுகள் இருக்கின்றன.

தொடர்ச்சியாக ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதமாக பார்க்கின்றது. கிட்டத்தட்ட ஆயிரத்தி நானூற்றி இருபத்தி நான்கு கிராமங்களில் வன்னி மாவட்டத்தில் மக்கள் இருக்கிறார்கள். அனைத்து கிராமங்களுக்கும் நாங்கள் தேவைகளை செய்ய வேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சில கட்சிகளை சார்ந்தவர்கள் தவறாக பிரச்சாரங்களை ஊட்டுவார்கள். என்னை பொறுத்தளவில் எந்த கிராமத்துக்கும் எது தேவையோ நான் அதை அடையாளப்படுத்தி செய்வேன். ஏனென்றால் கடந்த காலம் பிரதி அமைச்சராக இருக்கின்ற போது இறைவனுடைய உரிமையோடு என்னால் முடிந்ததை செய்திருக்கின்றேன்.

அந்த அடிப்படையில் எதிர்காலங்களில் இறைவன் தந்திருக்கின்ற இந்த அதிகாரத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே அவர்களுடைய எண்ண கருவில் அதே போல பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடைய ஒரு திட்டமிட்ட அபிவிருத்தி என்கிற பாதையை எதிர்காலத்தில் வன்னி மாவட்டத்திலே பாரிய திட்டங்களை செய்வதற்குரிய நாங்கள் முன் மொழிவுகளையும் தற்பொழுது கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

சாதாரண தரம் சித்தி அடையாதவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு கொடுப்பது என்பது பாரிய பிரச்சனையாக தான் எமது பகுதிகளில் இருந்தது. இளைஞர்களுக்கு உரிய வேலை வேலைவாய்ப்பு துரிதமாக விரைவாக வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளமான வீதிகள் திருத்தம் செய்யப்படுகின்றது. பதினொரு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததனால் கிட்டத்தட்ட அது ஒரு ஆயிரம் கிலோ மீட்டர்களை இந்தப் பகுதிக்கு கொண்டு வரக்கூடிய ஒரு நிலைமை இறைவன் உதவியுடன் கொண்டு வந்திருக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு கிராமத்திலும் சிறுபான்மை மக்களிடம் அதாவது அரசியலை மார்க்கமாக, சமயமாக பார்க்க வேண்டிய நிலைமைக்கு எங்களுடைய தலைவர்களும், அரசியல்வாதிகளும் திணித்தார்கள்.

மார்க்கம் வேறு அரசியல் வேறு நன்றாக நாங்கள் இதை எதிர்காலங்களில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி சார்ந்தவராக ஒவ்வொருமுறையும் இறைவன் ஆளுங்கட்சியில் ஒருவரை வைத்து அவர்களுக்கூடாக பல வேலைகளை செய்து தந்திருப்பதன் அடிப்படையில் எதிர்காலங்களில் எங்களால் திட்டமிட்ட அடிப்படையில் எந்தவிதமான இன பாகுபாடுகளோ, சமூக பாகுபாடுகளோ அதே போல கட்சி பாகுபாடுகளோ, பிரதேச வேறுபாடுகளோ இல்லாமல் தொடர்ச்சியாக இந்த வேலை திட்டங்களை செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *