தாயை கொலை செய்த மகள் கைது
கஹவத்தை, வெல்லதுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி அதிகாலை கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 71 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த பெண் தனது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற போதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தாயை கொலை செய்த மகள் கைது
இந்த சந்தேகத்திற்கிடமான கொலைச் சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் மகளே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி இன்று அதிகாலை 38 வயதான சந்தேக நபரான மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி
- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது
- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை
- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை
- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை
- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு
- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்
- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது
















