தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது
குருநாகல் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற இளம் பெண்ணொருவர் மோதர பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் வேவ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளம் பெண் சந்தேகநபர் ஒருவர், குருநாகல் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று மோதரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்ததாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் பொலிஸாரால் சுமார் 7 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேகநபர் மோதர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குருநாகல் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
- மரம் விழுந்து விபத்தில் பள்ளி மாணவன் இரு பெண்கள் பலி
- எரிபொருள் விலை நெருக்கடி
- விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் டிக்டாக் காணொளிகள் தொடர்பாக இளைஞர் கைது
- புனரமைப்புப் பணிகளுக்காக நவம்மஹாரா ரயில்வே கிராசிங் மூடப்படுகிறது
- ஐந்து வயது சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு
- இலங்கையைப் புனரமைக்கும் நிதி முடங்கிக் கிடக்கிறது
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு பெற்ற கொள்கைகளால் விவசாயத் துறை சரிவைச் சந்திக்கும் அபாயம்: விவசாயிகள் சங்கம்
- எல்லாவில் 98 ஏக்கர்ஸ் ரிசார்ட் 5.1 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு
- 25 மில்லியன் அமெரிக்க டாலர் திறைசேரி மோசடி விசாரணை
- கட்டாய உழைப்பு வரி விதிப்பு
















