சீமான் ….!

Spread the love

{ facebook name - vannimainthansong } click here my personal facebook

{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls

சீமான் ….!

தலைவன் முன்னே நின்று
தலைமை தாங்கிறான் …
தமிழன் என்று கூவியே
தரணி எழுப்பிறான் ….

வாடி வீழ்ந்த மக்கள் கண்டு
வாடி துடிக்கிறான் ….
வள்ளல் ஆட்சி தந்திட
வாக்கு கேட்க்கிறான் …..

உலகம் எல்லாம் உன்னை கண்டு
உறக்கம் தொலைக்குது ….
உறங்கியவர் கட்சி எல்லாம்
உடு புடவை இழக்குது ….

பிணங்கள் கண்டு எழுந்தவனே
பிரளயத்தை தந்தவனே …
புலிகள் ஆண்ட ஆட்சி போல
புலிகள் ஆட்சி தந்திடுவாய்

நாம் தமிழர் ஆளும் காலம்
நம்பி நீயும் தந்திடுவாய் …
நாங்கள் வாழும் புலம் பெயரை
நம்பி எறிய வைத்திடுவாய் …

உள்ளுக்குள்ளே வலிகள் தாங்கி
உலவுகிறோம் இங்கே …
உணர்வுடனே நடக்கும் காலம்
உரிமையோடு தந்திடுவாய் …

எழுந்து வந்த ஈழம் இன்று
எதிரிகளின் காலிலே ..
என்று நாங்கள் எழுந்திடுவோம்
எம்மினத்தின் தலைவனே ….?

சீமான்

Leave a Reply