சிரியா மீது தாக்குதலுக்கு தயாராகி வரும் துருக்கி -ஆயுதங்கள் குவிப்பு
துருக்கிய இராணுவத்தினர் சிரியாவின் எல்லை கடந்து ,துருக்கிய ஆதரவு படைகள்
நிலை கொண்டுள்ள ,கோட்டையாக கருதப்படும் Sarakib பகுதியில் நிலை கொண்டுள்ளனர் .
இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கனரக வண்டிகள் ,கவச வாகனங்கள் ,
பீரங்கிகள் ,ஏவுகணைகள் ,எறிகணைகள் ,.டாங்கிகள்,துருப்பு காவிகள்
என்பனவற்றுடன் துருக்கி மூவாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினருடன்
தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
விரைவில் நிலவும் சமரச பேச்சுக்களை முறித்து இட்லீ பகுதியின் கணிசமான
பகுதிகளை மீள மீட்கும் நடவடிக்கையில் துருக்கி ஈடுபடும் என அந்த களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன
மீண்டும் இங்கு பெரும் போர் வெடிக்கும் எனவும் ,இதில் ஆயிர
கணக்கில் இரு பகுதியிலும் உயிர் சேதங்கள் ஏற்படும் என அடித்து கூற படுகிறது
சிரியா படைகளுக்கு ஆதாரவாக ஈரான் ,ரசியா களத்தில் உள்ளன ,
குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக துருக்கி ,அமெரிக்கா உள்ளன ,
இந்த களமுனை மூன்றாம் உலக போரை ஆரம்பித்து வைக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது