சஜித் தனது சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை
சஜித் தனது சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்விச் சான்றிதழ்களை நேற்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகக் கூறிய போதிலும், அவர் இதுவரையில்
அதனை பாராளுமன்றத்தின் ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், சான்றிதழ்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், இன்று (டிசம்பர் 19) காலை வரையிலும் எதிர்க்கட்சித் தலைவர் தனது சான்றிதழை ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றார்.






