கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்
இலங்கையில் ஆளும் அரசுகளை வாழவைத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது ,
காணமல் ஆக்க பட்டவர்கள் போராட்டம் ,தொடர் தமிழர் காணிகளை சிங்கள படைகள் ஆக்கிரமித்து நிலை
கொண்டுள்ளது வரையும் ,அது தவிர ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று சிங்கள அரசை காப்பாற்றியமை ,
என பல வரலாற்று துரோகங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது ,இவ்வாறான நிலையில் தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவை ,இரகசியமாக சநதித்த
சுமந்திரன் அவரை வெல்ல வைக்கும் தந்திரோபாய ஆட்டத்தை அவர்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடத்தினார்
,அதன் வழியாக இனவாதத்தை காக்கவே சிங்கள வாக்குகள் கோத்தா மேல் வீழ்ந்தது ,இதனையே அடுத்து தற்பொழுது மீளவும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்
கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்
தனி நாட்டு கோரிக்கை மற்றும் ,தமிழர் இனப்பிரச்சனை ,ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையை முடக்குவது என்ற வேற்று கோஷங்களை முன் வைத்து முழங்கி வருகிறார்
,இந்த செயல் பாடுகள் மீளவும் தனிப்பெரும்பான்மையுடன் கோட்டபாயவை வெல்ல வைக்கும் கபட தந்திரம் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் ,
கடந்த நல்லாட்சி அரசில் சுமந்திரன் புரிந்த பல்வேறு பட்ட நரி தந்திர விளையாட்டுக்கள் , தமிழர் பின்னோக்கி சென்று எண்ணி பார்க்க வேண்டும் .
அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவும் ,அபிவிருத்தி என்ற கோட்டாவின் மாயைக்குள் தமிழர்களின்
மூளைகளை கழுவி காய போடவே இந்த கூட்டமைப்பு முக்கிய தலைகள் ஆட்டம் போடுகின்றன ,
இவ்வாறு ஒருபுறம் இவர்கள் ஆட்டுவிக்க மறுபுறம் கூட்டமைப்பை உடைக்கும் தீவிர நகர்வில் மகிந்தா அணி செயல்பட்டு வருவதை இவர்கள் உணர மறந்தால் ,
கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்
பாரிய வரலாற்று தவறு ஒன்றில் இருந்து இவர்கள் மீள முடியாத துயரை சந்திப்பர் என்பதும் அதனை சிங்கள
ஆளும் பவுத்த இனவெறி அரசு செய்து முடிக்கும் என்பதை எதிர்வரும் காலங்கள் இடிந்து உரைக்கும் என்பதை இப்பபோதே கூறி வைத்து கொள்கிறோம் –
வீழ்வதும் மடிவதும் உங்கள் கைகளில் உள்ளது ,அரசியல் என்பது எப்பொழுதும் ஒரு நேர்கோட்டில் பயணிப்பதில்லை என்பது புரிந்து கொண்டால் நல்லது – வன்னி மைந்தன் –