கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை
கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை க்கு வருகிறது
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும்படி கோரி முன்னாள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகிறார்.
இன்று காலை இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி
ஹெரத், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இன்று காலை சுமார் 8.00 மணியளவில்தான் மனுத் தாள்கள் கிடைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், எதிர்மனுதாரர்களிடமிருந்து இன்னும் அறிவுறுத்தல்கள் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரொஹந்த அபேசூரியவுடன் அமர்வில் இருந்த நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ, மனுவை விசாரிக்க மறுத்துவிட்டார்.






