கூட்டமைப்பு மகத்தான வெற்றி 15 பிளஸ் போனஸ் ஆசனங்கள் 17 ..?

Spread the love

கூட்டமைப்பு மகத்தான வெற்றி 15 பிளஸ் போனஸ் ஆசனங்கள் 17 ..?

தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை அமோக வெற்றியை பெற்று வீறு நடை போடுகிறது


தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட மேற்படி கட்சிக்கு தமிழர்கள் தோற்றுவிடாமல் தொடர்ந்து தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்

ஆனால் சம்பந்தர்,சுமந்திரன் போன்றவர்களின் ஈழ தேசிய விடுதலைக்கு எதிரான கருத்துக்கள் மக்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தியது

கூட்டமைப்பு இம்முறை பலத்த இழப்பை சந்திக்கும் என்ற நிலையில் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த கூட்டமைப்பின் மீது வீச

பட்ட போலியான பிரச்சாரங்கள் அதன் வெற்றியை தீர்மானிக்க வைத்துள்ளது

சம்பந்தர் சுமந்திரன் மீதான விமர்சனங்கள் மட்டுமே வைக்க பட்டது ,ஆனல் சிங்கள அரச கூலிகளுக்கு துணைபோன ஊடகங்கள் புரிந்த

போலியான பொய்யான விமர்சனங்கள் ஊடாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்று மகத்தான சாதனையை படைத்தது தமது இருப்பை தக்க வைத்துள்ளது

ஆனல் அடுத்து வரும் தேர்தலில்ஸ் அஜித் அணியினர் யாழ்ப்பாணத்தை வன்னியை இலக்கு வைத்து புதியவர்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

அவ்வாறு தெரிவு செய்யப்பட உள்ளவர்கள் நாமறிந்தவரை மக்கள் மத்தியில் நல்மதிப்பு பெற்றவர்கள்

இவர்கள் ஊடாக மக்கள் வாழ்வாதாரங்கள் ,அடிப்படை பிரச்சனைகள் ,வேலை வாய்ப்புக்கள் தீர்க்க பட்டால் கூட்டமைப்பு

கோட்டை சுருண்டு விழும் நிலைகள் எதிர் வரும் தேர்தல்களில் ஏற்படலாம்

எனவே இம்முறை இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு

மக்களுக்குரிய உடனடி உதவிகளை செய்திட வேண்டும் தவறின் மக்கள்

இந்த பேராதரவு தொடர்ந்து நீடிக்குமா என்பதும் ,தொடர்ந்து தமிழ் தேசிய வாத நிலை வெற்றி பெறுமா என்பதும் கேள்வியே .

அரசியல் என்றும் ஒரு நேர் கோட்டில் பயணிப்பதில்லை
கடந்த காலங்களில் விட்ட தவறுகளை திருத்தி கூட்டமைப்பு

பயணித்தால் தொடர்ந்து இது போன்ற மக்கள் ஆதரவை தக்க வைத்து கொள்வார்கள்

அது தவறின் வென்று விட்டோம் என்ற மகிழ்வில் மறை கழன்ற சுமந்திரன் போன்றவர்களின் கீழ் நிலை தேசிய இழிவு பேச்சுக்கள் மேலும்சிதைவுகளை ஏற்படுத்தும்

இந்த கூட்டமைப்பின் ஒன்று பட்ட பலத்த வெற்றியை ,கோட்டாபய நிச்சயம் விரும்ப மாட்டார் ,அப்படி என்றால் தமிழர்களுக்கு வழங்க

படும் உதவிகள் தீர்வுகளை இவர்கள் வேண்டும் என்ற கலாம் கடத்தி ,மக்கள் மனதில் வெறுப்புணர்வை தூண்ட கூடும்

இது பெரும் நெருக்கடி நிறைந்த ஒன்றாக கூட்டமைப்பு மாற்றம் பெறும் ,அவை எவ்வாறு எதிர்கொண்டு கூட்டமைப்பு பயணிக்க

போகிறது என்பதை வைத்து அதன் அடுத்து வரும் வெற்றி தீர்மானிக்க படும் என்பதை அடித்து கூறலாம்

15 ஆசான்கள் கிடைத்துள்ளது போனஸ் ஆசனங்கள் இரண்டு கிடைக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது அவ்விதம் எனின் 17

ஆசான்களுடன் கூட்டமைப்பு கம்பீரமாக வலம் வர போகிறது
இதனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள் என மக்கள் சமூகம்

நம்புகிறது ,சிந்தித்து செயல் படுமா தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ..?

நன்மை பெறுமா தமிழ் தேசிய இனம் ..?

  • வன்னி மைந்தன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *