கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு
கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு ,கிளிநொச்சி ஊற்றுப் புலப் பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு இறந்தவர் 68 வயதான பெண் எனவும் , வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் இவ்விதம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்ட போலீசார்
சடலத்தை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடல பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர்
தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர் நாள்தோறும் வீதிகள் பற்றை காடுகள் புதர்கள் நீர் ஏரிகள் பாழடைந்த வீடுகள்
என்பனவற்றிலிருந்து தமிழர்களுடைய சடலங்கள் தொடராக மீட்கப்பட்டு வருகிற அவலம் தொடர்கிறது .
இது 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கை ஒன்றாகவே இதனை பார்க்க முடிகிறது.
ஆகவே இந்த படுகொலைகள் யாவும் மர்மமாகவே தொடர்ந்து நிலை பெறுவதால் தமிழர்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












