காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்…!
காலி – அகுரெஸ்ஸ வீதியின் இமதுவ அகுலுகங்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மின்சார சபைக்கு சொந்தமான லொறி ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும்
ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 7 பேர் காயமடைந்த நிலையில், கராபிட்டிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .