மனிதா காப்பாற்று ….!
மரங்களின் வியர்வையில்
மழை வர கண்டேன் …
மனித சிந்தை
மரக்கொலை அதிர்ந்தேன் ….
வாழ காற்றை
வழி தரும் மரத்தை
கொன்ற மனிதா – உன்
கொலையை எதிர்த்தேன் ….
கொஞ்சம் எண்ணாய் .?
கொள்கை கொள்ளாய் …?
இயற்கை அழித்து
இன்றென்ன காண்பாய் …?
மலைகளின் உயர்வில்
முகில்களின் உரசல் …
பனி தர கண்டேன்
பளிங்கு நீர் உண்டேன் ….
என்னை காக்கும்
என் வளம் அழித்து …
உன் உயிர் கொல்லும்
ஊழியம் அகற்று ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -06/04/2019