காசாவில் 100 மக்கள் பலி

காசாவில் 100 மக்கள் பலி
Spread the love

காசாவில் 100 மக்கள் பலி

காசாவில் 100 மக்கள் பலி யாகியுள்ளதாக பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் யூத படிகள் பாலஸ்தீனம் காசா பகுதியில் தாங்கியவாறு மக்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி 300-க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சமாதான உடன்படிக்கை முடித்து இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட இதுவரை காலப் பகுதியில் 3,427 மக்கள் பலியாகி 9647 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் நடத்திவரும் இன அழிப்பு

யூத படைகள் தொடர்ந்தும் பாலஸ்தீனம் காசா மீது நடத்திவரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பிரான்ஸ் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் காட்டும் கண்டனங்களை தெரிவித்திருந்தது .

இஸ்ரேல் சமரச பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்வதாக அறிவித்திருந்த நிலையில் ,தொடர்ந்து இந்த படுகொலையை நடத்தி கொண்டுள்ளது .

இந்த தொடர் படுகொலை மக்கள் மத்தியில் சலசலப்பையும் பரபரப்பை மேம்படுத்தியுள்ளது.