கண்ணீர் சமர்ப்பணம் …..!
நேற்றெங்கள் வீதியிலே
நீள் நடந்த நிலவு ..
பேச்சின்றி போனதுவோ ..?
பேர் இடி தந்துவே ….
கால் ஊன்றி நடக்கையில
கை பிடித்து சென்றவளே …
வேர் பிடித்து நாம் நிமிர
மோர் வாத்து நின்றவளே ….
உன் வலியை உளம் புதைத்து
உன்னை நீ வதைத்து …
எழுந்து நடந்தவளே
ஏற்றங்கள் கண்டவளே ….
வேரறுந்து வீழ்ந்தாயோ ..?
வேறாகி போனாயோ …?
பொங்கி வரும் கண்ணீரை – உன்
பொற்பாதம் தூவுகிறோம் …
கலகலத்த உன் பேச்சு
கனிவான உபசரிப்பு ….
நெஞ்சம் ஏறி நினைவு தூற
நெஞ்சே தீ தின்ன மறைந்தாயே …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/05/2019