ஓடி வா காதலே …!
உன் நினைப்பில் நானே
உடைந்து போனேன் மானே ….
கண்ணில் உன்னை காட்டு
கை தொழுவேன் நானே …
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
நித்தம் பொழியும் பாசம் ….
முத்தம் பொழிய தூண்டுதே
முன்னே வா தேனே …
காதல் வசப்பட்டு மனசு
காற்றாய் பறக்குது ….
கண்டபடி கனவில
கண்ணே உன்னை காட்டுது ….
பிரிந்த பொழுதில்
பிரியம் தவிக்குது …..
சேந்து விட தானே – விழி
சேர்ந்து அழுகுது ….
கூண்டு கிளியே
கூடுடைத்து வாராய் ….
காத்திருக்கேன் நானே
கண்ணீர் பாராய் …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/04/2019