தமிழர்களிடத்தில் மன்னிப்புக் கேட்டால் பிரச்சினை தீரும்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களமக்களிடம் அடிமட்டத்துக்கு இறங்கி பகிரங்கமாக, தேசிய ரீதியில் மன்னிப்புக் கோரினாலேயே எமது நாட்டின் அரைவாசிப்
பிரச்சினைகள் தீா்ந்து விடுமென யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள் புனா்வாழ்வு மற்றும் அத்தியாவசிய சேவை ஆணையாளராக இருந்த எஸ்.பி.திவாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்தோன்றி சாட்சியமளிக்கும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவா் அங்கு தொடா்ந்து சாட்சியமளிக்கையில், தமிழ், முஸ்லிம் மக்கள் நல்லவர்கள், எனது 40
வருடகால அரச சேவையில் அவர்களோடு இணைந்து சிறப்பாக சேவையாற்றியுள்ளேன். கொடுத்த ஒரு விடயத்தை அவா்கள் சிறப்பாக செய்து தருவார்கள் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் இன்றும் மொழிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இன்றும் தெற்கில் உள்ள அரச
அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு அலுவலக கடிதங்களை அனுப்புகின்றார்கள்.
இம்மொழிப்பிரச்சினைக்கு அரசமட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்க
வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொண்னம்பலம் காலம்தொட்டு தொடர்கிறது எனவும் தெரிவித்தார்.
- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன
- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்
- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு
- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது
- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை






