என்னை அழைப்பாயா

என்னை அழைப்பாயா
Spread the love

என்னை அழைப்பாயா

கொண்டையில மல்லிகை பூ
கொலிசாட்டம் ஆடுதடி
தண்டவாள ரயில் போல
தாவணியோ ஓடுதடி

கண்டாவளை சந்தையில
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
இரணைமடு அருவி போல
இதயத்துள் ஓடுறியே

பரந்தன் வீதியில
பாவை நீ போகையில
பார்க்காமல் இருப்பேனோ
பாவி நான் துடிக்கேனோ

உன்னை தொடர்ந்திடவா
உள்ளத்திலே இருந்திடவா
என்னை நீ எண்ணாம
எக்காலம் இருப்பாயோ

ஒத்தையில நீ இருந்து
ஓரமா அழுகிறியோ
வித்தைகளை நான் காட்ட
வித்தகனை அழைக்காயோ .!

ஆக்கம் 21-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )