உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!
ஊரும் கதற உறவும் கதற
உன்னை தேடுறேன் – நீ
உள்ளம் தந்தால் போதும் நானும்
உயிரே வாழுவேன்
ஆசை உன்னில் வைத்து விட்டேன்
அதனால் பாவமே – என்
ஆயூள் முடிவை நீயே சொல்வாய்
அன்பே தாங்குவேன்
நீரை போல ஓடி வரும்
நீளம் தாண்டுவேன்
நீயும் வந்தால் போதும் – இந்த
நிலவை வாங்குவேன்
காடும் மலை கடந்து வந்தால்
காட்சி காணலாம்
கடைசி வரை வாழும் வாழ்வில்
நீட்சி பேணலாம்
உன்னில் ஒன்றை மட்டும் தானே
உயிரே கேட்க்கிறேன்
உன் உள்ளம் தந்தால் போதும்
உன்னை தாங்குவேன் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-06-2022