உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
உலகளாவிய ரீதியில் பயண எச்சரிக்கையை அமெரிக்கா அவசர அவசரமாக வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மை காரணமாக,
வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை (22) உலகளாவிய எச்சரிக்கை பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.
தனது உத்தியோகபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,
வெளியுறவுத்துறை, “இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பயணங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது மற்றும் அவ்வப்போது வான்வெளி மூடப்பட்டுள்ளது.
அமெரிக்க குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நலன்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
“உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்துகிறது.
பயணத்தைத் திட்டமிடும்போது எங்கள் பயண ஆலோசனை, நாட்டுத் தகவல் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கைகளை கவனமாகப் படியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முக்கிய இணையதளம்:
https://travel.state.gov/content/travel/en/international-travel/International-Travel-Country-Information-Pages.html
இந்த இணையதளத்தில் உங்கள் பயண நாடு குறித்து:
பாதுகாப்பு நிலை, சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், உள்ளூர் சூழ்நிலைகள், சுகாதாரம், மருத்துவ வசதிகள், தூதரக தகவல்கள் உள்ளடங்கலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னறிவிப்பு மூலம் பயணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க உலக நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் செயற்பட்டு வருகின்றன. மேலதிக விசாரணைகளுக்கு உங்கள் அருகிலுள்ள அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் எங்கு இருந்தாலும், பாதுகாப்பாக இருங்கள். இந்த எச்சரிக்கை அறிவிப்பை உங்கள் சுற்றுவட்டாரத்தவருக்கும் பகிருங்கள். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது,












