உயிர் குடிக்கும் டிப்பர் – மிதக்கும் உடல்கள்

உயிர் குடிக்கும் டிப்பர்
Spread the love

உயிர் குடிக்கும் டிப்பர் – மிதக்கும் உடல்கள்

கேப்பாபிலவு – புதுக்குடியிருப்பு வீதியில், இன்று (01) மாலை 5.30 மணியவில் இடம்பெற்ற விபத்தில்

இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

வற்றாப்பளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த

மூவர், எதிர்திசையில் வந்த டிப்பருடன் மோதியதையடுத்தே விபத்து சம்பவித்துள்ளது.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து டிப்பர் சாரதி முள்ளியவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்தில், பிலக்குடியிருப்பு கேப்பாபிலவினை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து (வயது 48), அதே

இடத்தைச் சேர்ந்த சூரியகுமார் கரிதாஸ் (வயது 17) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த சண்முகம் நிறோஜன் (வயது 22) என்ற இளைஞன்

படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடயில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

டிப்பர் வகானத்தினை அந்த இடத்தில் விட்டு எடுத்துசெல்லமுடியாதவாறு மக்கள் ஒன்று

கூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டு பொலிஸாருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *