
உன்னால் தவிக்கிறேன்
எந்தன் வாழ்வு ஏன் சோகமானது
ஏனோ என் கண்கள் நீரானது
வலிகள் மட்டும் நெஞ்சில் தொடரானது
வாழ்வே இன்று மெல்ல இருளானது
எனக்கு மட்டும் ஏன் துயரானது
இது யார் விதித்த சாபமானது
இறந்து போகவே இன்று மனம் எண்ணுதே
இதயம் வேதனையில் இன்று கருகுதே
உந்தன் நினைவு உயிரே என்னை கொல்லுதே
உறக்கம் இன்றியே விழியும் துடிக்குதே
நினைத்த மனதை நினைவு மறக்குமோ
நீயும் மறந்தால் மனம் உன்னை ஒதுக்குமோ
காலம் இந்த காலம் பொய்யானது – உயிர்
காதல் இங்கு வீணானது
தொட முன்னரே தொடரும் முடியுமோ
தொட்டு விட்டால் தொல்லை யாகுமோ
என்ன விதியோ இதை யார் செய்ததோ
பன்மைக்குள்ளே இங்கே பல செயல்களோ
உண்மையானால் இங்கே உறவு வெறுக்குமோ
உயிரும் இங்கே வலியால் துடிக்குமோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 01-10-2024
0044 7536707793
- வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release
- என்னை பார்ப்பாயா பதில் சொல்
- மீண்டும் பதிகின்றேன்
- நீறாகிப் போன நினைவுகள்
- கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா