
இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி
இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியா ராணுவத்தைச் சேர்ந்த 4 தளபதிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடைந்த கட்டிடங்கள் ஊடாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியபடைகளை இலக்கவைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் கடும் தாக்குதலை நடத்தினர்.
நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலி
இந்த தாக்குதலின் பொழுதே நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்ரேலிய இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது .
மேலும் இந்த தாக்குதலில் டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய படைகள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் நான்கு தளபதிகளில் மட்டுமே பலியாகி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனினும் இவர்களுக்கு பாதுகாப்பாக வருகை தந்த ஏனைய சக சிப்பாய்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இஸ்ரேல் எதனையும் தெரிவிக்கவில்லை.
மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல்
உடைந்த கட்டிடங்களுக்கு ஊடாக மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .
தேடுதல் நடத்திக் கொண்டிருந்த கமாஸ் போராளிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் படைகள் ஈடுபட்டன .
அவர்களையே உள்ளே நுழைய விட்டு கன்னி வெடிகள் பொறி வெடிகளை வெடிக்க வைத்து ,அத்தனை படைகளையும் கூண்டோடு சரிய வைத்து தாக்குதலை நடத்தி மகிழ்ந்துள்ளது கமாஸ் போர் படைகள் .
தொடராக இஸ்ரேல் படைகள் இவ்வாறான இழப்புகளை சந்தித்து வருவது அந்த படைகள் உளவியல் ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இதுவரை நான்கு தளபதிகள் மட்டுமே பலியாகி உள்ளதாகவும் இவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இஸ்ரேல் படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .
ஆனால் தாக்குதலை நடத்தியவர்கள் நான்கு இஸ்ரேல் தளபதிகளுடன் டசினுக்கு மேற்பட்ட படைகள் பலியாகியும் ,அதே சம அளவான படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது ..
- அமெரிக்கா விமானத்தை துரத்திய ஈரான் விமானங்கள்
- இஸ்ரேல் தாக்குதலில் 200 காசா மக்கள் பலி
- அதானிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்தும் கலந்துரையாடல்
- 141 உக்ரேனிய ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
- ஏமனுக்கு எதிராக அமெரிக்கா 170 தாக்குதல்களை நடத்தியுள்ளது
- அமெரிக்கா விமானதங்கி கப்பலை தாக்கிய ஹவுதி
- இஸ்ரேலிய தாக்குதல்களில் மேலும் 14 காசா மக்கள் கொல்லப்பட்டனர்
- ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
- சிரியாவின் லடாகியாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்
- அச்சுறுத்தல்களுக்கு பேரழிவு தரும் பதிலடி கொடுப்பதாக IRGC தலைவர் எச்சரிக்கிறார்