இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது
இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைதுதலைமன்னார் கடற்பகுதியில் ஒன்பது மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல் செய்தது
இலங்கை கடல் எல்லை
தலைமன்னார், உருமலை முனைக்கு அருகே இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததற்காக,
ஒரு மீன்பிடி இழுவைப் படகையும் அதனுடன் ஒன்பது இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
நேற்று (12) சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) கடந்து இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த அந்த இழுவைப் படகு,
ஆழ்கடல் இழுவலை மீன்பிடிப்பில்
ஆழ்கடல் இழுவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையால் இடைமறிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட மீனவர்களும் மீன்பிடி இழுவைப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.







