வழி கொடு இறைவா ….!
கண்ணீர் உதிர
கைகள் தொழுதேன் …
கடவுள் என்றால்
கருணை காட்டு …
விந்தை உலகில்
வீசி எழ …
சிந்தை புகுந்து
சிறகு கட்டு …
நோதல் தாங்கி
நொந்து வெந்தேன் …
கிண்டல் செய்தார்
கிலி கொள்ள வை …
கந்தல் கிழிய
கருணை காட்டு …
கண்ணீர் துளியை
கையால் தட்டு …
உன்னில் வெறியன்
உந்தன் மறவன் …
இன்று நிமிர
இறைவா காட்டு …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -04/04/2019