இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
Spread the love

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் இன்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

முதலாவதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலின் தலைவர் பேராசிரியர் ரொஷ்லெட் அவர்களுக்கு நன்றி. கடந்த இரு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

2008 ஆண்டு ஐரோப்பா கடன் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தது. அதனையடுத்து COVID-19 பரவல் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களின் விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

அண்மைய வரலாறுகளில் இவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் முகம்கொடுத்திருக்கவில்லை என்பதோடு இவ்வாறான நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளே பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.

அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்களனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.

அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.

வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன. அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது.

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது வருந்தற்குரிய காரணமாகும்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர் அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் போது ஆபிரிக்க வலயத்தின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் தேவைகள் கனிசமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு 5.9 ட்ரிலியன் டொலர்கள் அவசியப்படுகின்றன.

அதேபோல் நிகர பூச்சிய உமிழ்வை அடைந்துகொள்வதற்கு வலுசக்தி தொழில்நுட்பத்திற்காக 4 ட்ரிலியன்கள் அவசியப்படுகின்றன. இலங்கையின் காலநிலை சுபீட்சத்துக்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நிதித் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

  • ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்
    Spread the love         ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில் பேச்சுவார்த்தைகளின் செயல்திறன், கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள அர்ப்பணிப்பைப் பொறுத்தது என்று ஈரான் அதிபர் கூறுகிறார் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தை வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம், இரு தரப்பினராலும் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கடமைகளைச் செயல்படுத்துவதைப் பொறுத்தது என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறினார். “பேச்சுவார்த்தைகளின் செயல்திறன், ஒப்புக்கொள்ளப்பட்ட கடமைகளுக்கு முழுமையான அர்ப்பணிப்பையும், அவற்றைத் துல்லியமாகச் செயல்படுத்துவதையும் சார்ந்துள்ளது,” என்று பெஷெஷ்கியன் X தளத்தில் எழுதினார். “இந்தப் பாதையில் முன்னேற்றம் என்பது, ஏற்றுக்கொள்ளப்பட்ட…
  • குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்
    Spread the love         குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன் குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன் அழுததற்காகக் குழந்தை நாற்காலியில் கட்டப்பட்டுத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் தொடர்ந்து அழுததாகக் கூறப்படும் ஒன்பது மாதக் குழந்தை தொடர்ந்து அழுததாகக் கூறப்படும் ஒன்பது மாதக் குழந்தையை நாற்காலியில் கட்டி, குடையின் கைப்பிடியாலும் தன் கைகளாலும் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, கொழும்பு மேலதிக நீதிபதி லஹிரு சில்வா நேற்று ஜூலை 3 ஆம் தேதி வரை…
  • இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்
    Spread the love          இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம் இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட (PTA) சீர்திருத்தங்களில் மெதுவான முன்னேற்றம் காரணமாக, இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம் உள்ளது – கூட்டு எதிர்க்கட்சிக் கேள்வி பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பான சீர்திருத்தங்களின் மெதுவான முன்னேற்றம் காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை அணுகுவதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்கள் அனுபவித்து வரும் ஒரு சிறப்புச் சலுகையான GSP+ வர்த்தகச்…
  • ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்
    Spread the love         ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும் ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும் ,லப்புகம மற்றும் களத்துவாவாவிலிருந்து மகாரகமவிற்குச் செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் நடைபெறும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படும் என…
  • இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா
    Spread the love         இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா நிறுத்தப்பட்ட வோல்பாக்கியா டெங்கு திட்டம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன டெங்குவைக் கட்டுப்படுத்த வோல்பாக்கியா பாக்டீரியாவைப் பயன்படுத்தும் இலங்கையின் முன்னோடித் திட்டத்தின் நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அதன் சாத்தியமான நன்மைகள் இருந்தபோதிலும், கைவிடப்பட்டதாக நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ அந்த முயற்சி கைவிடப்பட்டதாக நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ கூறுகிறார். மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவரான டாக்டர்…