ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார்

ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார்
Spread the love

ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார்

ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார் ,ஆஸ்திரேலியா துணை பிரதமர் குழு ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது ,இந்த குழு தமிழர்களுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

இது நாடுகளுக்கு இடையிலான அரசியல் பொருளாதார வர்த்தக நடவடிக்கை தொடர்பாக பேசுவதற்கு, அவர் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் உட்பட்ட 15 பேர் கொண்ட குழு, கடந்த காலத்திலும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சருக்கு ,சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டாரை உள்ளிட்ட அதிகாரிகள் குழு வரவேற்று அழைத்துச் சென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை தடுத்து நிறுத்துதல்

விசேடமாக இலங்கை வந்துள்ள இந்த குழுவினரால் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை தடுத்து நிறுத்துதல் ,

அவுஸ்ரேலியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழ் அகதிகளை மீளவும் நாடு கடத்தல் தொடர்பாக எல்லாம் பேச்சுவார்த்தை நடைபெற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை ஆஸ்திரேலியா தீவிர படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக கடல் வழியாக தப்பிச் செல்லும் இலங்கை அகதிகளை தடுக்கவும் மீளவும் நாட்டுக் குழுவை அழைத்துவரும் நடவடிக்கையிலும், சிறப்பு ஏற்பாடுகளை

செய்யவும் இந்த பேச்சுவார்த்தை ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் யுத்தம் இல்லை

நாட்டில் யுத்தம் இல்லை அனைத்தும் முடிந்து விட்டதாக காண்பித்து அகதிகளை மீளவு நாட்டுக்கு திருப்பி எழுப்பு நடவடிக்கையில் பல ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது .

இவ்வாறன நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் இலங்கை வருகை பல சந்தேகங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.