அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

Spread the love

அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி, இன்று (06), அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு

வருகின்ற நிலையில், வடக்கில் உள்ள அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதற்கமைய, யாழ். – செம்மணியில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலத்துக்கு முன்னாள், காலை 10 மணியளவில், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆசிரியர்கள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, வவுனியா வடக்கு கல்வி வலயம் சார்பாக, காலை 9 மணிக்கு, புதுக்குளம் பகுதியில் உள்ள வவுனியா தெற்கு வலயத்துக்கு முன்னாள், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்துக்கு முன்பாகவும், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *