அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்

அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
Spread the love

அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்

அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள் ,அக்கரைப்பற்றில் உள்ள 241ஆம் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தின் சிற்றுண்டிச்சாலையின் முன்னாள் .

இருக்கும் வேம்பு மரத்திலிருந்து கடந்த ஒரு வாரகாலமாக பால்போன்ற திரவம் வழிந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஆரம்பத்தில் சாதாரணமாக வெளியேற தொடங்கிய பால்போன்ற பதார்த்தம் தொடர்ந்தும் வழிந்து வருவதுடன் போத்தல்களில் சேமிக்கும் அளவிற்கும் வெளியேறி வருவதை காண முடிகின்றது.

போத்தல்களில் பால் சேமிப்பு

சில காலங்களில் சில வேம்பு மரங்களிலிருந்து இது போன்ற பால் வெளியேறும் சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட கண்ணகி அம்மனின் ஆலயங்கள்

திறக்கப்பட்டு திருக்குளிர்த்தி உற்வசங்கள் நடைபெற்றுவரும் இக்காலத்தில் இவ்வாறு பால்போன்ற திரவம் வழிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது இதனை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

வேம்பு மரத்தின் பால் சுரக்கும் காட்சி

இந்த அதியச வேம்பு மரத்தின் பால் சுரக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .
இதில் வடியும் திரவம் என்ன என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பலவித பேச்சுக்கள் ஊசலாடுகின்றன .

குறித்த வேப்ப மரத்திலிருந்து வெளியேறும் பால்போன்ற திரவம் இனிப்பாக உள்ளமையும் அப்பிரதேசத்தில் ஒரு வகை வாசம் வீசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.