வவுனியாவில் பொதி செய்யப்பட்ட சப்பாத்தியை வாங்கிய நோயாளருக்கு கிடைத்த பேரதிர்ச்சி PHOTO

Spread the love

வவுனியாவில் பொதி செய்யப்பட்ட சப்பாத்தியை வாங்கிய நோயாளருக்கு கிடைத்த பேரதிர்ச்சி PHOTO

சுகயீனமடைந்த ஒருவருக்கு வவுனியா வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட ஆட்டாமா

சப்பாத்தி காலாவதித்திகதி முடிய முன்னரே பூஞ்சனம் பிடித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நோயாளருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் பொதிகள் செய்யப்பட்டு வியாபார நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் ஆட்ட மா சப்பாத்தியே இவ்வாறு பூஞ்சனம் பிடித்த நிலையில்

பொதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 11.02.2020 உற்பத்தி திகதியும் காலாவதித்திகதி 25.02.2020 என்று காணப்பட்டுள்ளது. நேற்று இரவு 21.02.2020 வவுனியாவிலுள்ள

வர்த்தக நிலையத்தில் குறித்த ஆட்டாமா சப்பாத்தி கொள்வனவு செய்யப்பட்டு இரவு உணவிற்காக எடுத்துச்

செல்லப்பட்டு தயார் செய்வதற்கு பொதி பிரித்துப்பார்வையிட்டபோது சப்பாத்தியில் பூஞ்சனம் பிடித்துக் காணப்பட்டுள்ளது.

காலாவதித்திகதியாக நான்கு தினங்கள் இருக்கும் நிலையிலேயே குறித்த சப்பாத்தியில் பூஞ்சனம் பிடித்த நிலையில் காணப்பட்டுள்ளது கொள்வனவு செய்த

நோயாளருக்கு மேலும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான உணவுப் பொருட்கள்

குளிரூட்டியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு மேற்கொள்ளுமாறு பொதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் பொதிகள் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் தராதரம் பாதுகாப்பு என்பனவற்றை

வர்த்தக நிலையங்களில் பரிசீலனை செய்து நோயாளர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் கற்பிணித்தாய்மார்கள்

இவ்வாறான பழுதடைந்த உணவுகளை உண்பதை தவிர்க்கப்படவேண்டும். வவுனியா நுகர்வோர் பாதுகாப்பு

அதிகாரசபையினர், பொது சுகாதாரத்துறையினர் இவ்விடயத்தில் கவனம் எடுத்துச் செயற்படுமாறு பொதுமக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்திடம் வினவியபோது, வவுனியாவிலுள்ள குறித்த சப்பாத்தி

பொதிகளை விநியோகம் செய்யும் விநியோகஸ்தரிடம் தொடர்பு கொண்டு வினவியுள்ளதாகவும் கொழும்பில்

பொதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தக நிலையங்களிலுள்ள குளிரூட்டியில் வைத்து

வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கியதுடன் நுகர்வோர் பாதுகாப்பு

அதிகார சபையினருடன் தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இனிவரும் காலங்களில்

இவ்வாறான நடவடிக்கை இடம்பெறாமல் இருப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பொதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *