வவுனியாவில் கூடிய புலிகள் மக்கள் பேரவை; உள்ளே நடந்தது இது தான் photo

Spread the love

வவுனியாவில் கூடிய புலிகள் மக்கள் பேரவை; உள்ளே நடந்தது இது தான் photo

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பாளர்களையும் இணைப்பாளர்களையும்

தெரிவு செய்யும் கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

அதன் பின்னர் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பேரவையின் தலைவர் த.இ.மலரவன்,

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் அரசியல் வேலைத்திட்டங்களும் அரசியல் நகர்வுகளும் மக்களை உள்ளடக்கி மக்களுடைய அலோசணைகளை பெற்றுத்தான்

பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஆகையினால் எதிர்காலத்தில் நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மாணிப்பார்கள் .

இது வரை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாங்கள இணைந்து செயற்பட எவ்வித விருப்பத்தினையும் தெரிவிக்கவில்லை அவர்களும் எமக்கு எவ்வித

அழைப்புக்களும் விடுக்கவில்லை . எதிர்வரும் காலங்களில் போராளிகள் யாவரும் ஒர் அணியாக பணிப்போம் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என தெரிவித்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மகளிர் அணி தலைவி பாவு கஜேந்தினி,

நாங்கள் போராளியாக இருக்கின்ற சமயத்தில் எங்களுக்கு தனித்துவமான ஒர் மரியாதை காணப்பட்டது. ஆனால் தற்போது அது காணப்படுவதில்லை அதன் காரணமாவே

பெண்களுக்கான உரிமையினை வென்றேடுப்பதற்காகவே விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையுடன் இணைந்துள்ளோம்.

பெண் தலமைத்துவ குடும்பங்களை எந்தவோரு அரசியல்வாதிகளோ யாருமே கவனத்தில் கொள்வது இல்லை விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையுடன்

எதிர்காலத்தில் பெண் தலமைத்துவ குடும்பங்களை சமூகத்தில் முதன்நிலைக்கு கொண்டு வருவதற்கு பாடுபடுவோம் என தெரிவித்தார்.

வவுனியாவில் கூடிய புலிகள்
வவுனியாவில் கூடிய புலிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *