வவுனியாவில் 22 பேர் கைது

Spread the love

வவுனியா பொலிஸார் நேற்று (02) மாலை மேற்கொண்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 3 மணிநேரத்தில் 22 நபர்களை கைது செய்துள்ளனர்.

“குற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உறுவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி

பீ.ஆர்.மானவடுவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று (02) மாலை மேற்கொள்ளப்பட்ட மூன்று மணிநேர விசேட நடவடிக்கையின் போது பெண்களுடன் பகிடிவதை குற்றச்சாட்டில் ஒருவரும், வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றச்சாட்டில் இருவரும்,

கேரளா கஞ்சாவுடன் நால்வரும், கரோயினுடன் ஒருவரும், நீதிமன்ற பிடியானை உத்தரவில் இருவரும், மதுபோதையில் வாகனம்

செலுத்திய குற்றச்சாட்டில் இருவரும் , சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேர், பொதுமக்கள் நடமாடும் பகுதியல் மதுபானம் அருந்திய

குற்றச்சாட்டில் நால்வரும் என 22 நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 நபர்களும் வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்றிலையில்

ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *