ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

Spread the love

ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் இருப்பதை அனுமதிக்க முடியாது என இலங்கை போராட்ட காரர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் அதி உயர் பதவியில் நாட்டை மேலும் ரணில் விக்கிரமசிங்க ஆள முனைந்தால் அவருக்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

பல் நாட்டு அரசுடன் இணைந்து அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள ரணில் விக்கிரமசிங்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிடவும் மேலும் நாட்டை கீழ்நோக்கி செல்லும் நிலைக்கு எடுத்து செல்ல பிற் படுத்தப்பட்ட சிந்தனைக்குள் ஊறியுள்ள ரணில் முயல்வார் .

ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

அதனால் அவரை அந்த பதவியில்; இருந்து விரட்டும் வரை நாம் போராடுவோம் என்கின்றனர் மக்கள் .

இவ்வாறான மக்கள் போராட்டங்கள் இலங்கையில் தொடர்ந்தால் இலங்கை மேலும் சோமாலியாக மாறும் நிலை ஏற்படும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் மன்றம் விரும்பாத ஒருவர் ஜனாதிபதி நிலையில் அங்கம் வகிப்பதை முற்றாக கைவிட வேண்டும் என அந்த போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர்.


எரிபொருளை நாட்டுக்குள் எடுத்து அதனை நிவர்த்தி செய்துவிட்டால் மக்கள் போராட்டம் அமைதியாகிவிடும் என்பதால் எரிபொருளில் மற்றும் எரிவாயு விநியோகத்தை150 ரூபாவுக்குள் மக்களுக்குவிற்பனை செய்திடும் நரி தந்திரத்தில் ரணில் ஈடுபட்டுள்ளார்.

இது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள்வும் மக்கள் எழுச்சியை மழுங்கடிக்க ரணில் விக்கிரமசிங்க போட்டுள்ள மகா நரி திட்டங்களில் இதுவும் ஒன்று என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர் .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *