மோதி சிதறிய இராணுவ வண்டி – இராணுவம் பலி

Spread the love

மோதி சிதறிய இராணுவ வண்டி – இராணுவம் பலி

நுகேகொட மேம்பாலத்தில் தனியார் பேருந்து ஒன்றும் இராணுவ

கெப் ரக வாகனம் ஒன்றும் இன்று (20) காலை நேருக்கு நேர் மோதி

விபத்துக்கு உள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட மற்றுமொரு

பஸ் வண்டி எதிரே வந்த இராணுவ கெப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராணுவ கெப் வண்டியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ்

ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள் இருவரும் கொழும்பு தேசிய

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *