மனிதன் மட்டும் மாறி விட்டான்

Spread the love

மனிதன் மட்டும் மாறி விட்டான்

சாதியில் இரண்டு ஊரடா -இறுதியில்
சனமது செத்த நிலமடா
இதனை செய்தவன் யாரடா
இந்த கேவலம் ஏனடா

சாதியில் என்ன சாதனையோ
சக மனிதற்கு இதனால் வேதனையே
ஆறாம் அறிவை முதல் தட்டு
அதனில் ஏறி அறம் நாட்டு

ஊர்வன பறப்பன மோதவில்லை
உலகை போரை மூட்டவில்லை
மனிதன் மட்டும் மாறி விட்டான் – அவன்
மண்டைக்குள் யாரோ புகுந்து விட்டான்

இறைவன் படைப்பில் முதல் யாதி
இவனே உலகில் முதல் யோதி
அன்பு செலுத்துதல் மறந்து விட்டு
அழித்தலை ஏனோ தொடர்ந்து விட்டான் …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 23-01-2021

கரையான் முள்ளிவாய்க்கால் –
வெள்ளாம் முள்ளிவாய்க்கால் –

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *