பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்
பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம், இலங்கையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அந்த பேருந்தில் பயணித்த, 13 பாடசாலை மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய மாணவர்கள்
மாலபே – ராஹுலபாடசாலை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உள்ளதாக ,அந்த பாடசாலையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பயணித்த பேருந்து ,நீரோடை ஒன்றை கடக்க முற்பட்ட பொழுது, ,அதற்கு அருகில் விழுந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பேருந்து விபத்து தொடர்பான, புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேருந்து சரிந்த நிலையில் காணப்படுகின்றது .
சாரதிகளின் அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை பின்பற்றாமயே, இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரூந்து விபத்து தொடர்பான, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக , இலங்கை காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பேருந்தை மீட்கும் நடவடிக்கையில் ,மீட்பு குழுக்கள் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றன.
- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்

- இலங்கையில் 1 1 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் தேக்கம்

- முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- ராகம மருத்துவமனை உபகரணங்கள் புனரமைக்கப்பட்டு மில்லியன் கணக்கில் சேமிப்பு







