பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு – ஒருவர் கைது

Spread the love

பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு – ஒருவர் கைது

40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை மோட்டார் சைக்கிளில்

கொண்டு சென்ற நபர் ஒருவர், தலுவ பிரதேசத்தில் வைத்து கைது

செய்யப்பட்டுள்ளாரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், நாகவிலு பிரதேசத்தைச் சேர்ந்தவர்

என தெரிவித்துள்ள பொலிஸார், புத்தளம் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட

சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தங்கமானது இன்று (27) இரவு கற்பிட்டி ஊடாக, இந்தியாவுக்குக்

கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார்


இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *