பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்
பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல் | கொண்டாடும் பெண்கள் ஈழப் பெண்ணே ஈழப்பெண்ணே.
பாடல் கேட்டு வெடித்து கிளம்பிய பெண்கள்
வீழ்ந்து போன பெண்களை தட்டி எழுப்பிய வீர பாடல் ,இந்த பாடல் கேட்டு வெடித்து கிளம்பிய பெண்கள் .
ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே என்ற பாட்டு பெண்ணினம் கொண்டாடும் நிலைக்கு ஏற்ற பாட்டாக எழுச்சி பாடலாக வெளிவந்துள்ளது .
யாழ்ப்பாணம் பாடல்களின் வரிசையில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக 63 வது பாடலாக வெளிவருகிறது .
அகல்யா எழுதிய ஈழப் பெண்ணே பாட்டு
அகல்யா எழுதிய ஈழப் பெண்ணே பாட்டு அவரது முதலாவது பாடலாக உள்ளது .
பாடலின் பெயர் – ஈழப் பெண்ணே
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் இந்தியா
இசை அமைப்பாளர் – இளங்கோ செல்லப்பா இந்தியா
பாடல் வரிகள் – அகல்யா – லண்டன்
பாடலின் வரிகள்
பல்லவி
ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே
எழுந்து வா நீ எழுந்து வா
தடைகள் உடைக்க
படைகள் நகர்த்த
தளராமல் நீ எழுந்து வா
அடக்கவா உன்னை முடக்கவா
அகிலம் விழிக்க எழுந்து வா
அங்கையற் கன்னியாய் வெடித்து வா – நீ
அங்கையற் கன்னியாய் வெடித்து வா
( சரணம் 1 )
இழிவா உனக்கு தலை குனிவா
விடை காண நீ எழுந்து வா
துணிவு காட்டு வீரம் நாட்டு
உன்னை யார் என உலகிற்கு காட்டு
தீண்டாமை உன்னை தீண்டவா – இந்த
தீயிலே நீ பொசுங்கி போகவா
தங்கமே நீ எழுந்து வா – இந்த
தரணி ஆள எழுந்து வா
( சரணம் 2 )
தவறுகளை தட்டி கேட்க கலங்காதே
துரோகத்தை துடைத்தெறிய தயங்காதே
தேச கொடியை நாட்ட எழுந்து வா
தேச புதல்வியே துணிந்து வா
வீர மங்கைகள் பிறந்த தேசமே
வீறு கொண்டு எழுந்து வா
பூமா தேவியாய் இருந்தவளே- இனி
பூகம்பமாய் வெடித்து வா







