பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்

Spread the love

பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்

முசாபர்பூரில் பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கி எடுத்துச் சென்ற மாணவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

பீகாரில் பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி


பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் கத்ரா என்ற இடத்தில் அரசு பள்ளி இயங்கு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் கடந்த 5-ந்தேதி துப்பாக்கியுடன் பள்ளிக்கு

வந்துள்ளான். மாணவன் துப்பாக்கி வைத்துள்ளான் என்ற தகவலை அறிந்த போலீசார், அதை கைப்பற்றி மாணவனை கைது செய்துள்ளனர். தற்போது மாணவரை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.

கை விலங்குடன் மாணவன்

துப்பாக்கி கிடைத்தது எப்படி? உள்ளிட்ட தகவலை பெற அவனிடம் விசாணை நடத்தி வருகிறோம் என முசாபர்பூர் கிழக்குப் பகுதி எஸ்.பி., எம்.கே. பாண்டே தெரிவித்துள்ளார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *