நான் குடும்ப ஆட்சியை காப்பற்ற வரைவில்லை ரணில்

Spread the love

நான் குடும்ப ஆட்சியை காப்பற்ற வரைவில்லை ரணில்

ஒரு தனி மனிதன், ஒரு குடும்பம் அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பதற்காக நான் இந்த சவாலை பொறுப்பேற்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு இன்று மாலை விசேட உரையாற்றிய போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை.

என்னுடைய கால்களில் கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக

அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம்,

அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த

சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள். நான் எனது

கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன்.
அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *