திருகோணமலை முடக்கம் – மக்கள் அவதி

Spread the love

திருகோணமலை முடக்கம் – மக்கள் அவதி

திருகோணமலை மத்திய வீதியில் நேற்றைய தினம்(1)கொரோனா

தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதியானது முடக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடாத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், ஒருவருக்கு தோற்று உறுதி

செய்யப்பட்டதை அடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரிசோதனையில் மேலும் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய வீதி

ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.

பொலிசாரும் ராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *