ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது தொழிலாளர் துறை தனது கணினி அமைப்புகளில் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
தலைமை அலுவலகம்
அத்துறை வெளியிட்ட ஓர் அறிவிப்பில், தலைமை அலுவலகம், அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் துணைத் தொழிலாளர் அலுவலகங்களில் உள்ள
ஊழியர்களின் சேமநிதி (EPF) தரவு அமைப்பு மற்றும் டிஜிட்டல் EPF அமைப்பு தொடர்பான பொதுச் சேவைகள் இந்த இரண்டு நாட்களிலும் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் காலகட்டத்தில் உதவித்தொகை வழங்குதல் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
தேவையான சேவை
இந்தத் தேதிகளுக்கு ஏற்கெனவே சந்திப்பு நேரம் பெற்றவர்கள், தங்களுக்குத் தேவையான சேவையைப் பெறுவதற்காக,
ஒரு மாதத்திற்குள் எந்தவொரு வேலை நாளிலும் சம்பந்தப்பட்ட தொழிலாளர் அலுவலகத்திற்குச் செல்லலாம்.







