கோட்டாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி திடீர் பேச்சு
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் வு. எஸ்பர் (Mark Esper), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது Twitter பகத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலின்போது கொரோனாத் தொற்றை வெற்றிகரமாக
கையாண்டமை மற்றும் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு அவர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவிததுள்ளார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் ,
பயங்கரவாத ஒழிப்பு மற்றும் இந்து சமூத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.






