எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் , தீர்மானத்தை சமகி ஜன பலவேகய (SJB) கொண்டு வரவுள்ளது
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தெரிவித்துள்ளது.
இந்தப் பிரேரணையை சமர்ப்பிப்பதற்கான முடிவு கட்சியால் ஒருமனதாக எடுக்கப்பட்டது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) அஜித் பி. பெரேரா கூறினார்.
“இரண்டு காரணங்களுக்காக அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
முதலாவதாக, லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஏற்கனவே அவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது,
நிலக்கரி கொள்முதல் செயல்முறை
இரண்டாவதாக, நிலக்கரி கொள்முதல் செயல்முறையை அவர் முறையாக நிர்வகிக்கத் தவறிவிட்டார்,” என்று அவர் கூறினார்.
இந்த பிரேரணைக்கு பரந்த ஆதரவைப் பெறுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி தற்போது மற்ற எதிர்க்கட்சி குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு
வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மேலும் குறிப்பிட்டார்.
சுயாதீனமாக செயல்படக்கூடிய அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை வழங்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.







