உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் அனுரா
உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் அனுரா ,உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் பொருளாதார தாக்க மதிப்பீட்டை நாளை வெளியிடும் – ஜனாதிபதி
இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி (CBSL) தற்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்து, நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடும்
மதிப்பீட்டு அறிக்கையை நாளை (04) வெளியிடும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று (03) காலை நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டபோது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
தற்போது நிலவும் சூழ்நிலை
“நமது பொருளாதாரத்தில் அதன் சாத்தியமான தாக்கத்தை மதிப்பிடுவதற்காக இலங்கை மத்திய வங்கி தற்போது நிலவும் சூழ்நிலையை
மதிப்பாய்வு செய்து வருகிறது. அந்த அறிக்கையை இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் பெறுவேன் என்று எதிர்பார்க்கிறேன்.”
“இது நமது நிதித் துறைக்கான தாக்கங்கள் குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்கும்” என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.







