7 உணவகங்களுக்கு அபராதம் – அதிரடி காட்டிய நீதிமன்றம்

Spread the love

7 உணவகங்களுக்கு அபராதம்- அதிரடி காட்டிய நீதிமன்றம்

மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான 3

உணவகங்கள் உட்பட 7 உணவங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை

தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடிர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள்

உட்பட 7 உணவங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.

இதனை அடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதிம்,

70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *