இலங்கை வந்தடைந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்
இலங்கை வந்தடைந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசடோ கந்தா, உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று காலை (23) உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்தடைந்தார்.
நாடு நெருக்கடிக்கு பதிலளிக்கும் நிலையிலிருந்து மீட்சி
நாடு நெருக்கடிக்கு பதிலளிக்கும் நிலையிலிருந்து மீட்சி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி மாறும் ஒரு “முக்கியமான தருணத்தில்” கொழும்பு வந்தடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில், இலங்கையின் தொழிலாளர் அமைச்சரும், நிதி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த
பெர்னாண்டோவால் விமான நிலையத்தில் தான் அன்புடன் வரவேற்கப்பட்டதாக கந்தா குறிப்பிட்டார்.
அடுத்தகட்ட அபிவிருத்திக்கான முன்னுரிமைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக, அரசாங்கப் பிரதிநிதிகள், தனியார் துறை மற்றும்
உள்ளூர் சமூகத்தினருடன் கலந்துரையாட இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியைச் சாத்தியமாக்குவதற்காக
முதலீடுகளைத் திரட்டுவதன் மூலமும்
முதலீடுகளைத் திரட்டுவதன் மூலமும், இலங்கையின் இந்த மாற்றத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக கந்தா எடுத்துரைத்தார்.
இந்த முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது








