இலங்கை கல்வி திட்டத்தில் மாற்றம்

Spread the love

இலங்கை கல்வி திட்டத்தில் மாற்றம்

தயாரிக்கப்பட்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிசீலித்துள்ளார்.

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. இதில் தேசிய கல்விக் கொள்கையை வகுக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராயப்பட்டது.

சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புக்கள்

என்ற தொனிப்பொருளில் புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்படுகிறது.

இந்த முயற்சியில் எட்டப்படும் தீர்மானங்கள் நாட்டின் மீதும்இ எதிர்கால சந்ததி மீதும் தாக்கம் செலுத்துவதால்இ சகலரும்

இணங்கக்கூடிய கொள்கையைத் தயாரிப்பது முக்கியமானது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தக் கொள்கை பற்றிய இறுதி அறிக்கையை அங்கீகரிப்பதற்கு முன்னதாகஇ அதனை குறைந்தபட்சம் இரு மாதங்களேனும் சமூகக்

கருத்தாடலுக்கு உட்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் ஒன்லைன் கல்வி முறைமையை கூடுதலாக

பிரபலப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *