அருளினி பாட்டால் அழுத மக்கள்

அருளினி பாட்டால் அழுத மக்கள்
Spread the love

அருளினி பாட்டால் அழுத மக்கள்

சரிகமபாவில் மலேசியா பெண், அருளினி பாட்டால் அழுத மக்கள்.
சீனியர் சரிகமபா பாட்டு மன்றத்தில் பாடி அசத்திய மலேசியா குயில் அருளினி .


சரிகமபா நடுவர்கள் அந்த அரங்கில் குழுமி இருந்த மக்கள் யாவரும் ,அருளினியின் சிரிப்பில் மயங்கினர் .அருளினியின் கொஞ்சு தமிழும் ,வெளிப்படை தன்மையான பேச்சும் யாவரையும் கவர்ந்துள்ளது .

ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ,சரிகமபா நிகழ்வில் மலேசியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ் பெண்ணாக அருளினி காணப்படுகிறார் .

ஆட்டிசத்தால் பாதிக்க பட்ட அருளினி

ஆட்டிசத்தால் அருளினி பாதிக்க பட்டுள்ளதாக அவர் தெரிவித்த பொழுது, அங்கிருந்த மக்கள் யாவரும் கலங்கி போயினர் .தன்னை வாழவைத்து வருவது இந்த இசை தான் ,என அவர் தெரிவித்தார் . .

இந்த மேடையில் முதன் முதலாக அலேக்கா அலேக்கா என்கின்ற பாடலை பாடினார் ,அப்பொழுது நடுவர்கள் மற்றும் அந்த அரங்கமே எழுந்து நின்று அவரை வாழ்த்தியது .

மதுர குரலை தன்னகத்தே வைத்துள்ளார் ,மேல் சுருதியில் அருளினி பாடலை பாடிய பொழுது நடுவர்களே வியந்து, தம்மை மறந்து கைகளை தட்டி வாழ்த்தினர் .

அவ்வாறான சிறப்பு தகமை கொண்ட அருளினியின், சரிகமபா பயணம் புதிய அனுபவத்தை கற்று கொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

நான் வெற்றி பெறுவேனோ இல்லையோ என்பது முக்கியம் அல்ல . இறுதிவரை நிகழ்வில் பாட வேண்டும் என்பது எனது ஆசை என ,அவர் உண்மையை உரக்க கூறி இருந்தது ,அவரது வெளிப்படை தன்மையான பேச்சை காட்டியுள்ளது .

வெல்லுங்கள் அருளினி ,கலங்காது நடை போடுங்கள் ,உங்களோடு உலக தமிழர்கள் இருக்கிறோம் .

இவ்வாறானவர்களை இணைத்த ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள் பாராட்டுக்கள் .

வீடியோ

Featured

Loading...